வெளியூர் போறிங்களா..? ஒருநிமிஷம் இதை தெரிஞ்சிக்கிட்டு போங்க..!
VIRUTHUNAGAR POLICE ANNOUNCEMENT
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் வீட்டை பூட்டி விட்டு சாவியை யாரிடம் கொடுத்து இருக்கின்றனர், வீட்டிற்கு எத்தனை வாசல்கள் இருக்கிறது என்பது போன்ற தகவல்களை காவல் நிலையத்தில் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும் என்று காவல்துறையினர் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றது. இந்நிலையில், வெளியூர்களுக்கு செல்வோர் பூட்டப்பட்ட வீட்டின் சாவியை யாரிடம் கொடுத்து இருக்கின்றோம் என்பது குறித்த தகவல்கள் மற்றும் வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்கின்றது என்பதையும் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து செல்லவேண்டும் என்று காவல்துறை சார்பில் கிராமங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருக்கின்றது.
மேலும், இதுபோன்று வீட்டை விட்டு வெளியூர் செல்லும் பொழுது தகவல் தெரிவிக்கப்படாத பட்சத்தில் வீடுகளில் கொள்ளை போனால் அதற்கு காவல்துறையினர் பொறுப்பல்ல என்றும், அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலவே அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் காவல்துறையிடம் தெரிவித்து செல்லும் பட்சத்தில் உடைமைகள் பாதுகாக்கப்படும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
VIRUTHUNAGAR POLICE ANNOUNCEMENT