விருத்தாச்சலம் : மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள தொழூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் பார்வதி (வயது 38). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இந்த நிலையில், இவர் கடந்த 7-ம் தேதி காலை 11: 45 மணிக்கு தொழூரில் இருந்து ராஜன் பேருந்தில் ஏறி   விருத்தாசலத்திற்கு சென்றுள்ளார். இதன் பின்னர் வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. 

இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சுற்றி உள்ள கிராமங்களில் தேடி உள்ளனர். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேற்கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில், பார்வதி அந்த பேருந்தில் இருந்து இறங்கி வருவது மட்டும் பதிவாகி இருந்தது. அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழ்க்கண்ட அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்.

9092698006
9047538365


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viruthachalam Thozhur lady Missing Case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->