விராலிமலை | குடிநீர்த் தொட்டிக்குள் இறந்த நிலையில் 2 குரங்குகள் - அதிர்ச்சியில் நோயாளிகள்! - Seithipunal
Seithipunal


விராலிமலை அரசு மருத்துவமனையில் இருக்கும் குடிநீர்த் தொட்டிக்குள் செத்து மிதந்து கிடந்த 2 குரங்குகளை பார்த்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

புதுக்கோட்டை: விராலிமலை அரசு மருத்துவமனையில் சுற்றுப்பகுதியை சேர்ந்த நோயாளிகள் வெளி நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் குடிநீர்த் தொட்டி கடந்த இரண்டு நாள்களாக மூடி இல்லாத இருந்ததால் இரண்டு குரங்குகள் செத்து மிதக்கின்றன.

விராலிமலை அரசு மருத்துவமனைக்கு தினசரி சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் இதனை அறியாமல் மருத்துவமனையில் இருக்கும் குடிநீர்த் தொட்டியிலிருந்து வரும் குடிநீரை அருந்தி தங்கள் தாகத்தைத் தீர்த்துள்ளனர். 

சிகிச்சைக்கு இன்று மருத்துவமனைக்கு வந்த சில நோயாளிகள் தொட்டில் இருந்து வரும் குடிநீரை பிடித்து அருந்தும் போது ஒருவித துர்நாற்றம் வீசியுள்ளது. 

இதனால் சந்தேகமடைந்த நோயாளிகள் குடிநீர்த் தொட்டியை சோதனை செய்தபோது, அதில் இரண்டு குரங்குகள் இறந்து நிலையில் மிதந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். மருத்துவமனை அலுவலர்களின் இந்த அலட்சியப்போக்கால் என்ன செய்வது என அறியாது நோயாளிகள் திகைத்த நின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viralimalai2 monkeys dead in water tank


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->