இரவு வேளைகளில் துப்பாக்கி, பயங்கர ஆயுதத்துடன் முகமூடி கொள்ளை கும்பல் உலா.. மக்களே கவனம்..! அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு.!
Viluppuram Tindivanam Robbery Gang Make Continuous Robbery 19 April 2021
திண்டிவனம் அருகே திரைப்பட பாணியில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளில் புகுந்து, துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் மரக்காணம் சாலையில் இருக்கும் பிலவேந்திரன் என்பவரது வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், துப்பாக்கியை காட்டி அவர்களை தாக்கி 2 சவரன் செயினை பறித்துக்கொண்டு மஹிந்திரா எக்ஸ்.யூ.வி காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
அங்கிருந்து ஜாக்கம்பேட்டைக்கு சென்ற கொள்ளைக்கும்பல், குமார் என்பவரது வீட்டிற்குள் புகுந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் வரதராஜன் வீட்டிலிருந்து எல்.இ.டி டிவி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து அவனம்பட்டி அப்பகுதியில் உள்ள காத்தவராயன் என்பவரது வீட்டிற்கு வந்த கொள்ளை கும்பல், சுவர் ஏறி குதித்து உறவினர் என கூறி நடித்து கதவைத் திறக்கச் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் கதவை திறக்காமல் இருந்ததால் கத்தியை காட்டி மிரட்டிவே, பதறிப்போன அவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் விரைந்து வரவே முகமூடி கும்பல் கொள்கையை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதன்பின்னர், கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஞானசேகர் என்பவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான வீட்டில், காற்றுக்காக கதவை திறந்து வைத்து உறங்குகையில் கத்தி, துப்பாக்கி, இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கும்பல், குடும்பத்தினரை மிரட்டி பணத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளனர். அவர்களும் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடியதால், காரை அங்கேயே விட்டு விட்டு வயல் காட்டில் புகுந்து கொள்ளை கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
இதனையடுத்து, இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கார் மற்றும் காரில் இருந்த துப்பாக்கி குண்டுகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பொது எச்சரிக்கை: கோடைகாலம் என்று தயவு செய்து வீட்டின் வாயில்கள் திறந்து வைத்து உறங்குவதை தவிருங்கள். எப்போது என்ன சூழ்நிலை ஏற்படும் என்பது தெரியாது. அப்படி வீட்டு வாயிலை திறந்து வைத்து உறங்க முயற்சித்தால், உங்கள் மற்றும் உங்களின் குடும்பத்தினர் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு எதிரிகளை அச்சுறுத்த சில பொருட்களை கைக்கு எட்டும் வகையில் மறைவாக வைத்துக்கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Viluppuram Tindivanam Robbery Gang Make Continuous Robbery 19 April 2021