பெட்ரோல் பங்க் ஊழியர்களின் கழுத்தில் கத்தி வைத்து பணம் பறிப்பு.!
Viluppuram Tindivanam Petrol Punk Robbery Police Investigation 8 Feb 2021
திண்டிவனம் அருகேயுள்ள பெட்ரோல் நிலையத்தில், பெட்ரோல் போடுவது போல் நடித்து கத்திமுனையில் ஊழியரை மிரட்டி பணம் பறித்து செல்லும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் - புதுச்சேரி செல்லும் சாலையில், பெட்ரோல் பங்க் இருக்கிறது. இந்த பெட்ரோல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், ரூபாய் 500 நோட்டை கொடுத்து பெட்ரோல் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து, அங்கு பணியில் இருந்த ஊழியரும் பணத்தை பெற்றுக்கொண்டு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்த வேளையில், மூன்றாவதாக வாகனத்தில் இருந்தவன் ஊழியரின் கழுத்தில் கத்தி வைத்து அவரின் கைப்பையை பிரித்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு ஊழியரையும் மிரட்டி மொத்தமாக ரூ.36 ஆயிரம் பணத்தை மூவரும் பறித்து சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Viluppuram Tindivanam Petrol Punk Robbery Police Investigation 8 Feb 2021