10ம் வகுப்பு மாணவிகளிடம்.. பள்ளி முதல்வரின் வக்கிர புத்தி.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட கிரீன் பேரடைஸ் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயனை பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திண்டிவனத்தை அடுத்த ரெட்டனை கிராமத்தில் இயங்கி வரும் கிரீன் பேரடைஸ் சிபிஎஸ்சி பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் தலையில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு ஓராண்டுகளுக்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் இணையத்தில் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று காலை பள்ளி முதல்வர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை விழுப்புரம் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயனை வரும் பிப்ரவரி 1ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram cbse school chairman jailed untill feb1


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->