#BigBreaking | காதல் திருமணம் செய்த தம்பதி ஒரே மாதத்தில் வெட்டி படுகொலை.! பெரும் அதிர்ச்சி சம்பவம்.!
vilathikulam love marriage couple murder
விளாத்திகுளம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி சற்றுமுன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வெளியான முதல்கட்ட தகவலின்படி,
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாணிக்கராஜ் என்பவர், தனது மாமன் மகள் கடும் எதிர்ப்புக்கு இடையில், வேறொரு பெண்ணை காதல் திருமணம் முடித்தார்.
ஒருமதமாக வெளியூரில் தங்கி இருந்த புதுமண தம்பதி இருவரும், சில தினங்களுக்கு முன்பு ஊர் திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், இன்று இருவரும் வீட்டில் இருந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
vilathikulam love marriage couple murder