தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: நாங்கள் இதைத்தான் கேட்டோம் ... திருமாவளவன் பேட்டி!
VCK Thirumavalavan speech
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே இன்று பிற்பகல் 3 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.
தி.மு.க சார்பில் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
![](https://img.seithipunal.com/media/anna dmk-paj4n.jpg)
தி.மு.கவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தனித்தொகுதி 3, பொதுத்தொகுதி 1 என 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்.
தி.மு.க குழுவினரிடம் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியுள்ளோம். அதிமுக-பாஜக கட்சிகள் சிதறி கிடக்கிறது.
பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணி இயங்குகிறது. தனிச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
VCK Thirumavalavan speech