தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: நாங்கள் இதைத்தான் கேட்டோம் ... திருமாவளவன் பேட்டி! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே இன்று பிற்பகல் 3 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. 

தி.மு.க சார்பில் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிடோர் கலந்து கொண்டனர். 

தி.மு.கவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தனித்தொகுதி 3, பொதுத்தொகுதி 1 என 4 தொகுதிகளை கேட்டுள்ளோம். 

தி.மு.க குழுவினரிடம் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியுள்ளோம். அதிமுக-பாஜக கட்சிகள் சிதறி கிடக்கிறது. 

பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணி இயங்குகிறது. தனிச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Thirumavalavan speech


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->