ரேஷன் கடை ஊழியர்களை மிரட்டிய திமுக குண்டர்கள்.! கூடுதலாக பொங்கல் தொகுப்பு டோக்கன் கேட்டு அராஜகம்.!
vazhapadi dmk members worst
வாழப்பாடி அருகே பொங்கல் தொகுப்பு வழங்க விடமால், ரேஷன் கடை ஊழியர்களை திமுகவினர் அவதூறாக பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட ரேஷன் கடை பணியாளர்களிடம், திமுகவை சேர்ந்த சில குண்டர்கள், தங்களுக்கு கூடுதலாக பொங்கல் தொகுப்பு டோக்கனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அதற்க்கு ரேஷன் கடை ஊழியர்கள் மறுப்பு தெரிவிக்கவே, அவர்களை ஆபாசமான வார்த்தைகளால் திமுக குண்டர்கள் திட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும், திமுகவை சேர்ந்த இந்த குண்டர்கள் தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்களை மிரட்டி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
வாழப்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட 65 ரேஷன் கடைகளையும் இன்று பிற்பகல் அடைத்துவிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இந்த 65 ரேஷன் கடையை சேர்ந்த கிராம மக்கள் பொங்கல் தொகுப்பை பெற முடியாமல் மணிக்கணக்கில் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
அதே சமயத்தில், திமுக நிர்வாகிகள் என்று கூறிக்கொண்டு சில குண்டர்கள் ரேஷன் கடை பணியாளர்களை அவதூறாக பேசி, பணி விடாமல் தடுத்தது குறித்து, வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள வாழப்பாடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
vazhapadi dmk members worst