மின் கம்பத்தில் இருசக்கர வாகன மோதி விபத்து.! கொத்தனார் பலி.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை முத்தம்பட்டியை சேர்ந்தவர் கொத்தனார் பிரேம்குமார்(32). இவரது மனைவி சுந்தரதேவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிரேம்குமார் அவரக்குறிச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது சந்திரபட்டி அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த பிரேம் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheeler collided with an electric pole in Dindigul


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->