இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - தொழிலாளி உயிரிழப்பு
Twowheeler car accident in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள கணபதிபாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கூலிதொழிலாளி ராமச்சந்திரன்(58).
இவர் நேற்று தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பொம்மட்டிக்கு சென்று விட்டு மீண்டும் புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் ராமச்சந்திரன் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Twowheeler car accident in namakkal