இருசக்கர வாகன விபத்து தொழிலாளி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் உம்பளச்சேரி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சிவமணி (வயது30). இவர் வெள்ளப்பள்ளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மண் அள்ளும் எந்திரம் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த சிவமணியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிவமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheeler accident in nakai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->