கன்னியாகுமரி.! இருசக்கர வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமாரியில் இருசக்கர வாகன மோதிய விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

அம்மாண்டி விளை பொட்டல்குழியை சேர்ந்தவர் சகாய வால்டர். இவரது மகன் வயடஸ்கின் ஜோந்த்(வயது6) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் வீட்டுமுன்பு உள்ள சாலையை கடக்க முயன்ற போது, திருநயினார்க்குறிச்சி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளான்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் இருசக்கர வனத்தை ஓட்டி வந்த பென்கர் கிரோஷியோ என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheeler accident in kanniyakumari


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->