ஓசூர் அருகே இரண்டு ரவுடிகள் வெட்டிக் கொலை.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, ஓசூர் அருகே அலசநத்தம் தோட்டகிரி சாலையை சேர்ந்த பர்கத், ஆவலப்பள்ளி ஹட்கோ பழைய வசந்த் நகரை சேர்ந்த சிவா, ஓசூர், பார்வதி நகரை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட மூவரும் நண்பர்கள். 

இவர்கள் மீது பல வழக்குகள் உள்ள நிலையில், மூவரும் வழக்கு ஒன்றில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பிரகாஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததையடுத்து மற்ற இருவரும் கடந்த மாதம் சிறையிலிருந்து ஜாமினில் வந்தனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரகாஷிற்கும் ஜாமின் கிடைத்தது. இவரை பர்கத், சிவா ஆகியோர், காரில் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த, 10 பேர் கொண்ட கும்பல், மூன்று பேரையும் பயங்கர ஆயுதங்களுடன் விரட்டியது. 

இதில், சிவா மற்றும் பர்கத் கொலை செய்யப்பட்ட நிலையில், பிரகாஷ் உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two rowdys murder in osur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->