திருவண்ணாமலை || மது குடிக்க மறுப்புத் தெரிவித்த காவலாளி - வாலிபர்கள் எடுத்த விபரீத முடிவு.!
two peoples arrested for murder watch man in tiruvannamalai
திருவண்ணாமலை || மது குடிக்க மறுப்புத் தெரிவித்த காவலாளி - வாலிபர்கள் எடுத்த விபரீத முடிவு.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, பத்தியவாடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில், ஒரு அலுவலகத்தில், இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், செல்வகுமார் நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் பணியில் இருந்துள்ளார். அப்போது, அங்கு இரண்டு பேர் மது அருந்த முயன்றுள்ளனர். இதைப்பார்த்த காவலாளி செல்வகுமார் இருவரையும் விரட்டியடித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த இருவரும், அங்கிருந்து சென்றனர். பின்னர், இருவரும் நள்ளிரவில் மீண்டும் வந்து செல்வகுமார் துாங்கி கொண்டிருந்த போது, கல்லால் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றுவிட்டனர்.
மறுநாள் காலையில் அந்த வழியாக வந்த அப்பகுதி மக்கள் காவலாளி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் படி விரைந்து வந்த மங்கலம் போலீசார் செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையின் படி, சம்பவத்தில் ஈடுபட்ட கிளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, ஏழுமலை, பரசுராமன்,உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two peoples arrested for murder watch man in tiruvannamalai