இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 8.450 கிலோ தங்கம் பறிமுதல் - இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 8.450 கிலோ தங்கம் பறிமுதல் - இருவர் கைது.!

நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் மன்னார் வளைகுடா புத்தளம் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக மீன்பிடி பைபர் படகு ஒன்று கடலில் நின்றுகொண்டிருந்தது. 

உடனே ரோந்து போலீசார் விரைந்துச் சென்று சோதனையிட்டனர். அந்த சோதனையில், இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு தங்கம் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, ரோந்து போலீசார் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பைகளில் 8.450 கிலோ கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் சங்கிலிகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி ரூபாய் ஆகும்.

பின்னர், அந்த படகில் வந்த இரண்டு பேரையும் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், கூலிக்கு தமிழகத்துக்கு தங்கம் கடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for kidnape gold in srilanga


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->