மதுரையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்தியதாக 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


மதுரையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களைக் கடத்தியதாக 2 பேர் கைது.!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத்துக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில் தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி நகர் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், காளைத்தேவர் நகரை சேர்ந்த முத்துகணேஷ் தனது வீட்டில் சட்டவிரோதமாக ரூ.2.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 29,500 ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து கணேசை கைது செய்தனர். 

இதைத்தொடர்ந்து போலீசார் உசிலம்பட்டி பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்ப்போது அந்த வழியாக வேன் ஒன்று வந்தது. இதைப்பார்த்த போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 331 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. 

அதன் பின்னர் போலீசார் புகையிலை பொருட்கள் மற்றும் வேனையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த விருதுநகர் மாவட்டம் காத்தான்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவரை கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for kidnape drugs in madurai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->