திருநெல்வேலி : வள்ளியூரில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு: இரண்டு பேர் கைது! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி : வள்ளியூரில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு: இரண்டு பேர் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ ஜெகன். அப்பகுதியில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்து வரும் இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் தனது அலுவலகத்தை திறந்துகொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் நீளமான கத்தியால் வழக்கறிஞர் ஜெகனின் தலையில் வெட்டியுள்ளார். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ஜெகன் அரிவாளால் வெட்டிய நபரை மடக்கி பிடித்துக் கொண்டுள்ளார். 

உடனே அந்த பகுதியில் நின்றவர்களும் ஓடிவந்து அரிவாளோடு நின்றிருந்த மற்றொரு நபரையும் பிடித்து வள்ளியூர்  காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதன் பின்னர் வெட்டு பட்ட வழக்கறிஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆய்வாளர் ராஜூ சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அரிவாளால் வெட்டிய இருவரும் மூன்றடைப்பு அருகே உள்ள பேரின்பபுரத்தைச் சேர்ந்த பிரவின்ராஜ் மற்றும் கார்த்திக் என்பது தெரியவந்தது. 

அந்த படி போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கறிஞரை அரிவாளை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for attack lawyer in valliyur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->