சிறுமியை சீரழித்த கொடூர மிருகங்கள்.. பதைபதைக்க வைத்த விஷயம்.!!
two men sexual abuse child girl got 4 month pregnancy
வேலூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட் பகுதி அருகே மத்தூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள் ஒருவர், பத்தாம் வகுப்பு முடித்த நிலையில் தனது வீட்டில் இருந்துள்ளார்.
இதனிடையே அன்பரசன் (18) மற்றும் பிரதாப் (34) ஆகிய அதே பகுதியை சேர்ந்த இருவரும் தொடர்ந்து 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்து இருக்கின்றனர். இதில் அந்த சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருக்கின்றார்.
இது தொடர்பாக வெளியில் யாரிடமாவது தெரிவித்தால் கொன்று விடுவேன் என்று அந்த காமுகன்கள் இருவரும் சிறுமிக்கு கொலை மிரட்டலும் விடுத்து இருக்கின்றனர். இந்நிலையில், இந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த கயவர்கள் அன்பரசன் மற்றும் பிரதாப் ஆகிய இருவரின் மீதும் புகார் அளித்துள்ளனர். சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அன்பரசன் மற்றும் பிரதாப் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
two men sexual abuse child girl got 4 month pregnancy