நாளை ஆரம்பமாகிறது 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு.!
twelth public exam start from tomarro in tamilnadu
2024 -ஆம் ஆண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதியான நாளை தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கு தேர்வு நடைபெறும். இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க 4,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர்,வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்வுகள் முறையாக நடைபெறுவதற்கு, தேர்வுத் துறையால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டில் (ஹால் டிக்கெட்) கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்
English Summary
twelth public exam start from tomarro in tamilnadu