மது போதையில் வீட்டிற்கு வந்து கணவன் சொன்ன அந்த வார்த்தையால்., வெட்டி படுகொலை செய்த மனைவி.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே ராயல் மில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. பிரபுவுக்கு உமா மகேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரு குழந்தைகள் இருக்கின்றனர். பிரபு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.

உமா மகேஸ்வரிக்கும் பிரபுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் உமா மகேஸ்வரி ஆத்திரத்தின் உச்சியில் கணவர் பிரபுவை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மனைவி உமா மகேஸ்வரியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். உமா மகேஸ்வரியிடம் மேற்கொண்ட விசாரணையில் போலீசார் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

அதற்கு காரணம் சம்பவ தினத்தன்று பிரபு நல்ல மதுபோதையில் வீட்டிற்கு வந்து தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்ததாகவும் இதனால் ஆத்திரம் அடைந்து அவரை கொலை செய்ததாகவும் உமா மகேஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tuticorin wife murder husband for his irreavaling activity


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->