தொழிலாளியை அடித்துக் கொன்ற நண்பர்கள்: தீவிர விசாரணையில் போலீசார்!
Trichy worker death Police investigation
திருச்சியில் கட்டிட தொழிலாளி ஒருவர் நண்பர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் குணசேகர் (வயது 55). இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு விஜயகுமார், தர்மா என 2 மகன்களும் ரேவதி என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குணசேகர் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
மது பழக்கத்திற்கு அடிமையான இவர் மது போதையில் சாலை ஓரங்களில் உறங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு குணசேகர் உறையூர் சாலையோரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றி நண்பர்கள் ஒன்று சேர்ந்து குணசேகரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த குணசேகரனை நண்பர்கள் அப்படியே விட்டு விட்டு சென்றனர்.
மீண்டும் இன்று காலை வந்து பார்த்தபோது குணசேகர் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசேகர் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Trichy worker death Police investigation