அப்பாவும், மகனுமான கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை... காவல்துறை அதிரடி நடவடிக்கை.!!
Trichy police arrest father and son due to make fake liquor
கரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் மதுபானம் கிடைக்காமல் குடிமகன்கள் தவித்து வந்தனர். மேலும், கள்ளச்சாராய விற்பனையும் அதிகரித்தது.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி ஓரத்தூர் சிலுவைப்பாட்டி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்ததாக எட்வின் செல்வராஜ் (வயது 40) என்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனைப்போன்று நகுல லால்குடி பகுதியை சார்ந்த போவாளூர் தங்கராஜ் (வயது 61) மற்றும் அவரது மகன் கனகராஜ் (வயது 28) ஆகியோர் சாராயம் காய்ச்சியுள்ளனர். இது குறித்த தகவலை அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர். மேலும், அம்மாவட்டத்தில் நேற்று மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சியது, விற்பனை செய்தது தொடர்பான 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy police arrest father and son due to make fake liquor