திருச்சி: நாடககாதலில் விழுந்த இளம்பெண், ஏமாற்றத்தை உணர்ந்து தீக்குளித்து தற்கொலை முயற்சி.! - Seithipunal
Seithipunal


இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த காமுக கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளான். 

திருச்சி மாவட்டத்தில் உள்ள வையம்பட்டி பேச்சைக்கம்பட்டி பகுதியை சார்ந்தவன் அருண் பாண்டியன் (வயது 27). இவன் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தவறான அழைப்பு மூலமாக, காமுகனுக்கு அருகில் உள்ள கிராமத்தை சார்ந்த 20 வயது பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெண்மணியை காதல் வலையில் வீழ்த்த திட்டமிட்ட காமுகன், ஆசையாக பேசி வந்துள்ளான். 

மறுமுனையில் பேசிய பெண்மணியும் காதல் கவிதைகளிலும், கவர்ந்திழுக்கும் பேச்சுகளிலும் விழுந்த நிலையில், தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், காதல் தினத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் எனவும் கூறியுள்ளான். 

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த பெண்மணியை காமுகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதற்குள்ளாக, காமுகனுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருப்பது தெரியவரவே, மாணவி பெற்றோரிடம் விஷயத்தை கூறி கதறியழுது, தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

பெண்மணியை மீட்ட அக்கம் பக்கத்தினர், அங்குள்ள திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். பெண்மணி உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வரவே, இது குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி காவல் துறையினர் பெண்மணியிடம் வாக்குமூலம் பெற்று, வழக்குப்பதிவு செய்து அருண் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy girl Suicide Attempt due to Cheated by Married Drama Love Culprit Police Arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->