கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதா? குடிமகன்களில் இருந்து மதுபாட்டில்களை காப்பாற்றுவதா? புதிய முயற்சியில் அரசு.!!
trichy corporation new plan
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்று வருகிறது.
இதனால் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்களை குடிமகன்களில் இருந்து காப்பாற்ற திருச்சி மாநகராட்சி ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடுவது கடினம் என்பதால், அனைத்து மது பாட்டில்களையும் ஒரே இடத்திற்கு கொண்டு வந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்துள்ளது.
இதன்படி போலீசாரின் உதவியுடன் டாஸ்மார்க் கடைகளில் உள்ள மதுபாட்டில்களை அனைத்தும் ஒரே இடத்தில் கொண்டு வரப்பட்டு அங்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English Summary
trichy corporation new plan