#Breaking: திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்துக்கொலை.. அரங்கேறிய கொடூரம்.!!
Trichy child 14 year girl burned police investigation
திருச்சி அருகே சிறுமி எரித்து கொலை செய்யப்பட்டுளளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அதவத்தூர்பாளையம் சோமரசம்பேட்டை பகுதியை சார்ந்த பெரியசாமியின் 14 வயது சிறுமி கங்கா தேவி. இவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் இன்று அங்குள்ள சிறுவர்களுடன் விளையாடி வந்த நிலையில், சிறுமி மதியத்திற்கு மேல் மாயமாகியுள்ளார்.
இவரை காணாது அங்குள்ள இடங்களில் தேடியலைந்த பெற்றோர் மகளின் நிலையை எண்ணி பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், சிறுமி அங்குள்ள குப்பை மேட்டு பகுதியில் எரிந்த நிலையில் உயிருக்கு போராடியவாறு மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.
இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவ இடத்தில் திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளார். சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy child 14 year girl burned police investigation