அண்ணா பல்கலை.. தருமபுரி மாணவி தற்கொலை! செல்ல மறுத்த காதலனால் தூக்கில் தொங்கிய பரிதாபம்!  - Seithipunal
Seithipunal


தருமபுரியை சேர்ந்தவர் ஜெயவேல் என்பவற்றின் மகள் லோகேஸ்வரி. 20 வயதான இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்தார். அவருடன் அதே தருமபுரியை சேர்ந்த மாணவர் ஒருவரும் படித்து வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாற, இருவரது பெற்றோரும் காதலை ஏற்றுக்கொண்டதுடன், நிச்சயதார்த்தமும் செய்தனர். கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் நடப்பதாக இருந்தது.

இதனிடையே தந்தை ஜெயவேலுக்கு அதிகளவில் கடன் இருந்ததால் லோகேஸ்வரிக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்வி உதவித்தொகை பெற்று, படிப்பை தொடர முடிவு செய்து, தனது காதலனிடம் கல்வி உதவித்தொகை விண்ணப்ப மனு அளிப்பதற்காக கல்லூரி அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார். ஆனால் அவரது காதலன் செல்லவில்லை. 

ஏற்கனவே தந்தையின் கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த லோகேஸ்வரி, காதலன் தன்னுடன் வர மறுத்ததால் மேலும் மனமுடைந்த நிலையில், நேற்றிரவு தான் தங்கியிருந்த தனியார் விடுதிக்கு சென்று அங்குள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy anna university student suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->