சிகிச்சைக்கு சென்ற தந்தை-மகன் மாயம்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி: திருவண்ணாமலை சாலை அருகே உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது50). இவர் ஒரு பழ வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் சூர்யா (வயது 25), இன்பகணபதி (வயது 15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது இளைய மகனான இன்பகணபதி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவராக இருப்பதால், ஞானவேல் அவரை கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அடிக்கடி அழைத்து செல்வார். 

அதுபோல் ஞானவேல் தனது மகன் இன்பகணபதியை கடந்த மாதம் 22-ந் தேதி கேரளாவிற்கு அழைத்து சென்றுள்ளார். சில நாட்கள் ஆகியும் கேரளாவிற்கு சென்ற இரண்டு பேரும் வீடு திரும்பிவரவில்லை. 

இதனால் பதற்றமடைந்த ஞானவேலின் மனைவி கணவனையும், இளைய மகனையும் காணவில்லை என உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்கள் மாயமானது தெரியவந்தது. 

அதனை தொடர்ந்து சூர்யா கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்திற்கு சென்று, சிகிச்சைக்காக கேரளாவிற்கு சென்ற தனது தந்தையும், சகோதரனையும் காணவில்லை என்று புகார் தெரிவித்தார். போலீசார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாயமான தந்தை மற்றும் மகனை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

treatment went missing father and son


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->