குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.! - Seithipunal
Seithipunal


குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வந்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்று வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து காலையில் ஐந்தருவி மற்றும் பழைய வட்டார அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மெயின் அருவிகள் பாதுகாப்பு வளைவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சாரல் மலையுடன் தென்றல் காற்றும் வீசுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourists are allowed to bathe in Kutrala Falls


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->