திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை.!!
Tomorrow holiday for all schools and colleges in Tiruvallur district
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

தற்போது மழை குறைந்து வெள்ள மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களில் குறிப்பிட்ட சில தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்பொழுது திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Tomorrow holiday for all schools and colleges in Tiruvallur district