தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா.? முதலமைச்சர் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனாவின் மூன்றாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளின் விளைவாக கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது. 

இதனை தொடர்ந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. வார இறுதி நாட்களில் வழிபாடு தளங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பிப்ரவரி 15-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today cm mk stalin meeting for lockdown


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->