போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பித்த ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தேர்வு - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 டிசிசி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அந்த அரசாணையில், "ஆகஸ்ட் 18ம்தேதி பிற்பகல் 1 மணி முதல் செப்.18-ம் தேதி பிற்பகல் 1 மணி வரை ww.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் டிசிசி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் 19ம்தேதி தேர்வு நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டை நவம்பர் 13 முதல் https://tnstc.onlinereg.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி சீட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNSTC announce exam to driver and conductor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->