சென்னை மக்களே! மெட்டரோ- பறக்கும் ரயில் சேவை இணைப்பு! வெளியானது சூப்பர் தகவல்!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி நடைபெற்ற வரும் நிலையில் தற்போது சென்னையில் பறக்கும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வசதி போல மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மேற்கொண்டு வரும் மெட்ரோ ரயில் பணிகளுடன் பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் பல்வேறு வசதிகளுடன மாற்ற செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரயில்வே வாரியத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மந்தைவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ரயில் நிலையங்கள் முதல் கட்டமாக மறுசீரமைக்கப்படுகிறது.

மேலும் பறக்கும் ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கும் பட்சத்தில் விரைவில் டெண்டர் கோரப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt decided to combine metro and mrts train services


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->