திருமணம் முடிந்ததில் இருந்து நிம்மதியில்லாத வாழ்க்கை.. விபரீத முடிவெடுத்த இளைஞர்.!!
Tiruvannamalai Husband wife problem suicide police investigation
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சின்னப்பளிப்பாட்டு கிராமத்தை சார்ந்தவர் சந்திரசேகர் (வயது 26). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில், திருமணம் முடிந்ததில் இருந்து கணவன் - மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரியவருகிறது. இதனால் இருவரும் வீட்டிற்குள் எலியும் - பூனையும் போல இருந்து வந்துள்ளனர்.
சமீபத்தில் குடும்ப தகராறு காரணமாக கடந்த சில நாட்களாகவே வருத்தமான நிலையில் காணப்பட்ட சந்திரசேகர், சம்பவத்தன்று விஷம் அருந்திய நிலையில் மயங்கி இருந்துள்ளார். இவரைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
சந்திரசேகருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai Husband wife problem suicide police investigation