7 வயது சிறுமியிடம் அத்துமீறிய கொடூரன்.. திருவண்ணாமலையில் பேரதிர்ச்சி.!!
Tiruvannamalai child Torture abuse police investigation
7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யூர் தாலுகாவில் உள்ள பவுஞ்சூர் கிராமத்தை சார்ந்தவர் அரசப்பன். இவரது மனைவி ஜானகி. இவர்கள் இருவருக்கும் 7 வயதுடைய மகள் இருக்கிறார்.
இதே பகுதியில் வசித்து வந்த 18 வயது மாணவன் சூர்யா (வயது 18). சிறுமி நேற்று மாலை நேரத்தில் தனது வீட்டிற்கு முன்புறம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இந்த சமயத்தில், சிறுமியை தனது இல்லத்திற்கு சூர்யா அழைத்து சென்றுள்ளான்.
வீட்டிற்குள் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் காமுகன் ஈடுபட்ட நிலையில், அதிர்ச்சியடைந்த சிறுமி அலறியபடி வெளியே வந்துள்ளார். இதனைக்கண்ட பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி, சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.
நிலைமையை உணர்ந்த பெற்றோர், இந்த விஷயம் தொடர்பாக அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சூர்யாவை சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai child Torture abuse police investigation