முகநூலில் நூல்விட்டு, சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. திருவண்ணாமலையில் பகீர்.!!
Tiruvannamalai child girl sexual abuse police arrest culprits
15 வயது சிறுமியை முகநூல் மூலமாக ஏமாற்றி, நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களிடம் அத்துமீறும் காமுக கொடூரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் மக்களிடையே மேலோங்கி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி கருப்பன் நகர் பகுதியை சார்ந்த 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு முகநூல் உபயோகம் செய்யும் பழக்கம் இருந்துள்ளது.
சிறுமியிடம் அங்குள்ள இந்திரா நகர் பகுதியை சார்ந்த இலியாஸ் என்ற காமுகன் முதலில் நட்பாக பழகுவது போல பழகி, பின்னர் சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். இவனது காபி பேஸ்ட் கவிதைக்கும், எடிட்டிங் போட்டோவையும் பார்த்து மயங்கிய சிறுமியும் காதலில் விழுந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியை காமுகன் இலியாஸ் ஏமாற்றி, அங்குள்ள வந்தவாசி புறவழிச்சாலை சவுக்குத்தோப்பு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு முன்னதாகவே தனது நண்பர்களான பரத், சூர்யா ஆகியோரையும் வரவழைத்துள்ளான்.
விபரீதத்தை அறிந்த சிறுமி தன்னை வீட்டில் கொண்டு சென்று விடுமாறு கேட்கவே, காமுக காதல் மற்றும் அவனது நண்பர்கள் மூவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காமுகன் இலியாஸ், அவனது நண்பர்கள் பரத் மற்றும் சூர்யா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai child girl sexual abuse police arrest culprits