கத்தியுடன் வித்தை காட்டிய புள்ளிங்கோஸ்.. சந்திற்குள் விட்டு சிதறவிடாமல் சிந்துபாடிய மக்கள்.!!
Tiruppur Pulligow attacked by peoples
துறைக்குப்பம் பகுதியில் கத்தியுடன் மதுபோதையில் மக்களை மிரட்டிய புள்ளிங்கோஸை, மக்கள் வெளுத்தெடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள துறைக்குப்பம் பகுதியை சார்ந்த தெருவில், கத்தியுடன் 4 சிறுவர்கள் மதுபோதையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீதியில் நடமாடி வந்துள்ளனர். இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், இது குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், போதையில் இருந்த சிறுவர்கள் மக்களை மிரட்டியுள்ளனர். இதனால் கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளான மக்கள் புள்ளிங்கோசை விரட்டியுள்ளனர்.
இதில், இரண்டு புள்ளிங்கோஸ் தப்பி செல்லவே, கையில் சிக்கிய 2 பேரை மக்கள் அடித்து நொறுக்கினர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் புள்ளிங்கோசை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruppur Pulligow attacked by peoples