மனைவி பிரிந்து சென்ற சோகம்.. தம்பிக்கு தகவல் சொல்லி அண்ணன் தற்கொலை.!
Tiruppur Perumanallur Man Suicide due to Family Problem
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் லட்சுமி கார்டன் பகுதியை சார்ந்தவர் சிவகுமார் (வயது 45). இவர் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவன் - மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று மது அருந்திய சிவகுமார், சேவூரில் இருக்கும் தனது சகோதரருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு தற்கொலை செய்யப்போவதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரர் உடனடியாக வீட்டிற்கு புறப்பட்டு வந்த நிலையில், சிவகுமார் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruppur Perumanallur Man Suicide due to Family Problem