பரிகாரம் என்ற பெயரில் அரங்கேறிய கொடூர கொலை.. நூதன முறையில் கொள்ளை.. திருப்பூரில் பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் அகலராயபாளையம் பகுதியை சார்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவரது மனைவி ஈஸ்வரி (வயது 55). இவர்கள் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்த நிலையில், இவர்களின் மகன் உதயகுமாருக்கு (வயது 40) கடந்த 13 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

உதயகுமார் தனது மனைவியுடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டையில் பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். உதயகுமாருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இல்லாத காரணத்தால், ஆறுமுகம் - ஈஸ்வரி தம்பதியினர் பேரக்குழந்தைகள் இல்லை என ஏங்கி இருந்துள்ளனர். 

மேலும், தம்பதிகள் இருவரும் பல கோவிலுக்கு சென்று பரிகார பூஜைகளையும் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெள்ளகோவில் பகுதியை சார்ந்த சக்திவேல் என்பவர் ஆறுமுகத்தின் குடும்பத்திற்கு அறிமுகமாகியுள்ளார். ஆறுமுகம் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் மாந்திரீகவாதியாக இருந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

சக்திவேல் தனக்கு மந்திரங்கள் தெரியும் என்றும், பரிகார பூஜை செய்து பலருக்கும் நல்லது நடந்துள்ளது என்றும் ஆசை வார்த்தை கூறவே, உங்களின் கடையில் பரிகார பூஜை செய்தால் உங்கள் மகன் - மருமகளுக்கு குழந்தை பிறக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து ஆறுமுகமும், அவரது மனைவி ஈஸ்வரியும் பூஜைக்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்யவே, இன்று காலை 5 மணியளவில் கடைக்கு சென்றுள்ளனர். சக்திவேல் பூஜை சாமானுடன் கடைக்கு வந்த நிலையில், 3 பேரும் கடைக்குள் சென்றுள்ளனர். 

பரிகார பூஜை என்ற பெயரில் ஆறுமுகத்தையும், ஈஸ்வரியையும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சக்திவேல் கூறிய நிலையில், திடீரென இருவரையும் கொண்டு வந்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த வயதான தம்பதிகள் இரத்த வெள்ளத்தில் மிதக்கவே, ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். 

பின்னர் இவர்களின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்துவிட்டு, கடையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பி சென்றுள்ளான். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த ஆறுமுகம் மனைவியை பார்த்து கதறியழுத்துள்ளார். கடையின் ஷட்டரையும் தட்டியுள்ளார். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஷட்டரை திறக்கையில் விபரீதம் புரிந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வெள்ளகோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஈஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஆறுமுகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள சக்திவேலை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Aged Couple Murder and Attempt by Fraud Magician


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->