#நாமக்கல் மாவட்டம் || குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது.!
Three persons arrested for selling Gutkha in namakkal district
நாமக்கல் மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சந்தைப் பேட்டை, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் டீ கடை, மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் காவல்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஜெயசீலன், ஜெயராஜ், சுப்ரமணியம் ஆகிய 3 பேரை பரமத்திவேலூர் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த 10,000 ரூபாய் மதிப்புள்ள 300 குட்கா புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Three persons arrested for selling Gutkha in namakkal district