கிருஷ்ணகிரி - ஓசூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி - ஓசூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது.!!

தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஆங்காங்கே சோதனைச் சாவடியும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே சூளகிரி பாரதிபுரம் கிராமம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அந்தத் தகவலின் படி மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்புத்துறை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்பனை செய்வது உறுதியானது.

இது தொடர்பாக போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் போத்தி நாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுமா, கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாரதாம்மா மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் உள்ளிட்ட மூன்று போரையும் கைது செய்தனர். 

இதைத் தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் இருந்து சுமார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for kanja sale in krishnagiri


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->