அப்பாக்களின் நிலத்தகராறு பிரச்சனை.. மாமா மகனுடன் காதல்.. அரங்கேறிய கொடூர கொலை.. தூத்துக்குடியில் பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முக்காணி வள்ளுவர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் கனகா. இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை நேரத்தில் வீட்டில் இருந்த தனது சகோதரி பிரியா உடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், வீட்டிற்குள் உறவுக்காரர் மாரியப்பன் என்பவர் வந்துள்ளார். மாரியப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கனகாவை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். 

இதனைக்கண்டு மிரண்டு போன சகோதரி பிரியாவும், கனகாவின் உயிரை காப்பாற்றும் பொருட்டு தடுக்க முயன்ற நிலையில், அவரது கையிலும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதனால் படுகாயமடைந்த கனகா சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், சகோதரி பிரியா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கனகாவின் வீட்டிற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், கொலை நடந்த சிறிது நேரத்துக்கு பின்னர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த விஷயத்தில் மாரியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அவன் சைக்கோ போல காணப்பட்டுள்ளன. 

மேலும், மாரியப்பன் தந்தை தங்கராஜ், கனகாவின் தந்தை முருகேசன் உறவினர்களாக இருந்து வந்த நிலையில், இவர்கள் இடையே நீண்ட காலமாக பூர்வீக நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. பெரியவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டாலும், அத்தை மகன் உறவு என்பதால் மாரியப்பன் உடன் செவிலியர் கனகா காதல் வயப்பட்டுள்ளார். 

இருவரும் வீட்டிற்கு தெரியாமல் கடந்த சில வருடமாக அலைபேசி மூலமாக காதலை வளர்த்த நிலையில், இருவருமே பணிக்கு சென்று சம்பாதித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து பெற்றோரிடம் தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.  இவர்களின் திருமணத்திற்கு முருகேசன் வீட்டில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், செவிலியர் கனகா என்ன செய்வது என்று தெரியாமல், தவித்து மாரியப்பனுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார்.  

இதனால் கடந்த சில மாதங்களாகவே பைத்தியம் போல சுற்றி வந்த மாரியப்பன், சம்பவத்தன்று கத்தியை எடுத்து சென்று கனகாவை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதலில் உறுதியாக இருந்த பெண்மணி கிடைக்காமல் போய்விடுவாளோ? என்ற எண்ணத்தில் கொலை அரங்கேறியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Love girl Murder by Love Boy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->