கள்ளகாதலால் அரங்கேறிய கொடூர விபரீதம்.! வெளியான பகீர் வாக்குமூலம்.. அனாதையாக நிற்கும் குழந்தைகள்.!!
thoothukudi girl murder case police investigation
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியை சார்ந்தவர் கவிதா (வயது 30). இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., இவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நான்கு வருடத்திற்கு முன்னதாகவே கணவரை பிரிந்து., குழந்தைகளுடன் தூத்துக்குடியில் வசித்து வந்துள்ளார்.
இந்த சமயத்தில்., அங்குள்ள முத்தையாபுரம் பகுதியை சார்ந்த லாரி கிட்டங்கியில் கணக்காளராக பணியாற்றி வந்த நிலையில்., நேதாஜி நகர் பகுதியை சார்ந்த எட்வின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எட்வின் பனிக்கூழ் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ள நிலையில்., இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு மாதாநகர் பகுதியில் இருக்கும் குமரன் திரையரங்கம் பகுதியில் வீடெடுத்து வாடகைக்கு குடிவந்த நிலையில்., வீடு வசதியாக இல்லாததால் நேற்று முன்தினந்தன்று ஹவுசிங் போர்டில் உள்ள இல்லத்தில் புதியதாக குடியேறியுள்ளனர்.
இரவில் எட்வின் பணிக்கு சென்றுவிட்ட நிலையில்., இரவு பணியை முடித்துவிட்டு காலையில் எட்வின் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். கவிதா உடல் கருகிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த எட்வின் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற நிலையில்., கவிதாவின் கை மற்றும் கால்களில் வெட்டுக்காயமும்., உடல் அடையாளம் காண இயலாத வகையில் கருகி இருந்துள்ளது. இதனையடுத்து கவிதாவின் உடலை தூத்துக்குடி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலை முயற்சி என்று சந்தேகித்து விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., ஜோதிபாஸ் நகர் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி (வயது 32) என்பவரின் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில்., கருப்பசாமியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில்., கவிதாவை எரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில்., வீட்டினை காலி செய்து புறப்படும் சமயத்தில் கருப்பசாமியின் ஆட்டோவில் வைத்து ஏற்றி சென்ற நிலையில்., இரவில் கவிதாவும் - கருப்பசாமியும் தனிமையில் இருந்துள்ளனர்.
இந்த சமயத்தில்., கவிதாவுக்கு அடிக்கடி அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டே இருந்துள்ளது. கருப்பசாமி அலைபேசியை அணைத்து வைக்க கூறியும்., கவிதா அலைபேசியை அணைத்து வைக்காமல் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி கவிதாவின் காலில் கட்டையை வைத்து அடித்துள்ளார்.
இதனால் கவிதா காலில் காயத்துடன் வெளியே செல்ல முயற்சிக்கையில்., அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் என் மீது சந்தேகம் வர கூடாது என்பதற்காக மண்ணெண்ணையை ஊற்றி எரித்தும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கருப்பசாமியை கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
thoothukudi girl murder case police investigation