காவல் நிலையத்திலேயே எஸ்ஐ.,யை கத்தியால் தாக்கிய கும்பல்.! கதவை மூடி உயிர் தப்பிய எஸ்ஐ.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மீண்டும் உதவி காவல் ஆய்வாளர் மீது கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடு திருடிய கும்பலை விரட்டி சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கத்தியால் வெட்டி படுகொலை செய்த கும்பலை, போலீசார் கைது செய்து இந்த நிலையில், தற்போது தஞ்சாவூர் அருகே நான்கு பேர் சேர்ந்த கும்பல் உதவி காவல் ஆய்வாளரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே பாலத்தில் நேற்று இரவு தோகூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அப்போது சந்தேகப்படும் வகையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வாகனத்தில் வைத்திருந்த ஆயுதத்தை எடுத்த, அந்த நான்கு பேரும் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், கத்தியால் குத்திக் கொலை செய்யவும் முயன்றனர்.

காவல் நிலையத்தில் இருந்த மற்ற காவலர்கள் காவல் நிலைய கதவை மூடிய உடன், அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

பின்னர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த போது, அப்பகுதி மக்களின் உதவியுடன் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thokoor police si attacked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->