#கடலூர் | தாயின் கள்ளகாதலனிடமிருந்து பிளான் பண்ணி தப்பித்த சிறுமி!
Thittakudi Girl escape from home
தாயின் கள்ளக்காதலனிடம் இருந்து புத்திசாலித்தனமாக தப்பித்த சிறுமி ஒருவர், பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கு போன் செய்து புகார் அளித்த சம்பவம் கடலூர் அருகே நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள ம.பொடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவனை இழந்த சித்ரா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் உறவில் இருந்து வந்துள்ளார்.
சித்ராவிற்கு ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ள நிலையில், சித்ராவின் வீட்டிற்கு அடிக்கடி செந்தில் வந்து போவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், சித்ராவின் மகளை 15 வயது தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று, சித்ராவை செந்தில் மிரட்டி உள்ளார்.
மேலும் சித்ராவின் மகளுக்கு செந்தில் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அந்த 15 வயது சிறுமி புத்திசாலித்தனமாக வீட்டில் இருந்து தப்பித்து, பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கு போன் செய்து, தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்துள்ளார்.
இதனை புகாராக எடுத்துக் கொண்ட போலீசார், உடனடியாக செந்திலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சித்ராவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Thittakudi Girl escape from home