திருவாரூர்: தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா நடத்தினால் கடுமையான நடவடிக்கை..!!
Thiruvarur SP Warns
தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்ட 101 உயர்ரக செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் தங்கள் செல்போன்களை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இந்த மாதிரியான திருட்டு செல்போன்களை பயன்படுத்துவதால் உரிமையாளர்கள் பல இன்னல்களுக்கு உள்ளாவதாக தெரிவித்தனர்.
மேலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்படுள்ளது. இந்த தடை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நவடிக்கைகள் எடுக்கபடும் எனவும் தெரிவித்துள்ளார்.