7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. அதிர்ந்துபோன மக்கள்.!! தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.!!
Thiruvarur child sexual torture culprit arrest by police
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முன்னதாக பெண் பிள்ளைகளில் சிறுமிகளுக்கு எதிரான பிரச்சனைகள் குறைந்திருந்த நிலையில், ஊரடங்கு துவங்கியதில் இருந்து பல பாலியல் பலாத்காரங்கள் மற்றும் கொலை குற்றங்கள் அரங்கேறி வருகிறது.
இதனைப்போன்று ஆபாச படங்களை அனுப்பி பாலியல் மிரட்டி பலாத்காரம், பாலியல் தொல்லை, முகநூலில் மிரட்டல் மற்றும் பாலியல் பலாத்காரம் என திருமணம் முடிந்த பெண்களில் இருந்து இளம்பெண்கள், சிறுமிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நன்னிலம் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் பகுதியை சார்ந்தவர் வளையல் வியாபாரி கதிரேசன்.
இவர் அதே பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து சிறுமியை மீட்டனர்.
பின்னர் காமுகனை பிடித்து அடித்து நொறுக்கி, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கதிரேசனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvarur child sexual torture culprit arrest by police