குரங்கு கையில் பூமாலை.. முதலிரவன்றே மனைவி கடப்பாரையால் அடித்து கொலை.. சென்னையில் பயங்கரம்.!!
Thiruvallur new married girl murder police investigation
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோமஞ்சேரி பகுதியை சார்ந்தவன் நீதிவாசன். இவனுக்கும், அங்குள்ள சடயங்குப்பம் பகுதியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு, நேற்று இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதன் பின்னர் புதுமண தம்பதிகளை முதலிரவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், காலையில் வெகு நேரமாகியும் இருவரும் வெளியே வரவில்லை. மேலும், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த உறவினர்கள் உள்ளே சென்று பார்க்கையில், திருமணப் பெண் சந்தியா கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும், சந்தியா கடப்பாரையால் அடித்தும், குத்தியும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், நீதிவாசன் தலைமறைவாக இருந்ததால் மனைவி கொலை செய்து தலைமறைவாகியிருக்கலாம் என்று சந்தேகித்து தேடிவந்தனர். இந்த நிலையில், அங்கு அருகில் இருக்கும் வயல்வெளிப் பகுதியில் இருக்கும் வேப்ப மரத்தில் நீதிவாசன் ஆடைகள் எதுவுமில்லாமல் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
அவரது உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இடைப்பட்ட காலத்தில் மணமகன் நீதி வாசனிற்கு மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த மூன்று மாதங்களாக மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvallur new married girl murder police investigation