திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தொடர் மின்வெட்டு பிரச்சனை - கொரோனா நோயாளிகள் அவதி..!
Thiruvallur Govt Hospital Electricity Issue Corona Patients Feeling Sad 28 May 2021
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க அரசு பல நடவடிக்கையை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். நேற்று ஒருவர் மின்வெட்டு சமயத்தில் மூச்சுத்திணறி பலியான நிலையில், இன்று மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
மேலும், அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் இருந்தாலும், அதில் நோயாளிகளுக்கு நேரடியாக அனுமதி வழங்காமல், மேலிட செல்வாக்கு மற்றும் மருத்துவர் பரிந்துரை என்று பரிந்துரையால் வரும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thiruvallur Govt Hospital Electricity Issue Corona Patients Feeling Sad 28 May 2021