காதல் பெயரில் உல்லாசம்.. கம்பி நீட்ட நினைத்தவனை, கம்பிக்குள் அடைத்த காதலி.! - Seithipunal
Seithipunal


திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு இரயில் நகர், கே.என் அவென்யூ பகுதியை சார்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 27). இவர் திருவள்ளூரை அடுத்துள்ள திருநின்றவூரில் கண் கண்ணாடி கடையை வைத்து நடத்தி வருகிறார். 

திருவள்ளூரை அடுத்துள்ள வேப்பம்பட்டு ஐயத்தூர் கிராமத்தை சார்ந்த கல்லூரி மனைவியான 24 வயது பெண்மணியுடன் விக்னேஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 2019 ஆம் வருடம் விக்னேஸ்வரன் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் பெண்மணி கர்ப்பமான நிலையில், கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து பெண்ணின் கருவை விக்னேஸ்வரன் கலைத்திருக்கிறார். 

ஒரு சமயத்தில், காமுகன் விக்னேஸ்வரன் பெண்ணை கைவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த நிலையில், பெண்மணி திருவள்ளுர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சித்ரா தேவி, காமுகன் விக்னேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Culprit Try to Escape Love girl After Abuse Police Arrest 14 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->